<$BlogRSDURL$>

EVERYTHING

Monday, November 26, 2018

Amazing Health Benefits Of Moringa Seeds You Need To Know! 

https://youtu.be/9UTnCiBrwds


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Friday, November 16, 2018

முருங்கைக்காய்,  

முருங்கைக்காய்

முருங்கைக்காய் பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்





1:01












Displaying 07 Drumstick.mp3.

Click to Download

உங்கள் அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவை எங்களுடன் பகிர்ந்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும் service@vegetableclinic.com
சுவாச மண்டலத்தின் பணிகள்


சுவாச மண்டலத்தின் முக்கிய பணியானது ஒவ்வொரு செல்லிற்கும் பிராணனை கொண்டு போய் சேர்ப்பதாகும். சுவாசத்தில் இரு வகையுண்டு.
1. மேற்சுவாசம்,
2. கீழ் சுவாசம்.
குழந்தைகளின் சுவாசத்தின் போது வயிறு சுருங்கி விரியும். ஆனால் போகப் போக சுவாசம் மார்பு வரை வந்து வயதான காலத்தில் சுவாசம் தொண்டை வரை வரும். மூச்சு விட மிகுந்த சிரமம் ஏற்படும். சுவாசம் என்பது மூலாதாரம் வரை செல்ல வேண்டும். அது தான் முழுமையான சுவாசம். அதாவது முழுமையான வாயு பரிமாற்றமாகும். இந்த பிராணன் உடலால் ஏற்றுக் கொள்ளாத நிலை எதனால் ஏற்படுகின்றது?


நமது உடலில் பிராணன் உள்ளே சென்று அபிராணன் வெளியே செல்கிறது. ஆக்சிஜன் உள்ளே செல்கிறது. கார்பன் வெளியேறுகிறது. எங்கிருந்து கார்பன் வெளியேறுகிறது? நாம் உண்ணும் உணவுகளான கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை கார்பன் மூலக்கூறுகளால் ஆனவை. நாம் சாப்பிடும் உணவுத் துகளில் உள்ள கார்பன் ஒவ்வொரு செல்லிலும் படிந்து இருக்கும். கார்பன் என்பது உடலில் படிந்திருக்கும் ஒரு வகை குப்பை. எனவே உடலில் கார்பன் அதிகமாக அதிகமாக உடல் புத்துணர்வுடன் இருக்காது. ஆக்சிஜனை உள்வாங்கும் நிலை குறைந்து விடும். அல்லது கார்பனை வெளியேற்ற அதிகம் ஆக்ஸிஜன் தேவைப்படும். எனவே அதிகமாக மூச்சை இழுத்தும் விடும் நிலைமை ஏற்படும். (ஆஸ்த்மா).


வாகனத்தில் பெட்ரோலை எரிக்கும் போது ஏற்படும் புகை அந்த வண்டியின் புகை போக்கியில் மேலும் மேலும் படிந்து அடைத்துக் கொள்ளும். இஞ்சின் மற்றும் அனைத்தும் சரியான நிலையில் இருந்தால் கூட வாகனம் ஓடாது. அது போல எல்லா உறுப்புகளும் நன்றாக இருக்கிறது. ஆனால் குடலில் உள்ள கார்பன் படிமம் படிந்தால், அதிகமானால் நாம் உண்ணும் உணவு சரியாக உறிஞ்சப்படாத நிலை ஏற்படும்.


அதனால் பிராணனை உள்ளே இழுக்க சிரமம் ஏற்பட்டு செல்கள் இறக்கும் நிலை ஏற்படும். ஆக்ஸிஜன் எங்கு இல்லையோ அங்கு இறந்த செல்கள் உருவாகும். அதிகப்படியான சமைத்த, வறுத்த, பொரித்த உணவுகளை உண்பதால் குடலில் கார்பன் அதிகமாக சேரும். குடலில் அதிக அளவு அழுக்குகள் சேர்வதின் காரணமாக குடல் பாதிப்பிற்குள்ளாகும்.


கார்பன் அதிகமாக அதிகமாக ஆக்ஸிஜனை பயன்படுத்தும் உறுப்புகள் பாதிக்கப் படுகின்றன. நம் உடலில் பிராணனை அதிகமாகப் பயன்படுத்தும் உறுப்புகள் இரண்டு.


1. மூளை
2. சிறுநீரகம்


இந்த இரு உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் அதிகம் தேவை. எனவே சுவாசம் குறையும் போது பாதிக்கப்படுவது நுரையீரல் இல்லை. மூளையும், சிறுநீரகமும் தான் பாதிப்பிற்குள்ளாகும்.

முருங்கைக்காயின் நன்மைகள்


மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் செல்லவில்லை எனில் மூளை சோர்ந்து விடும், மயக்கம் ஏற்படும் , உட்கார்ந்த நிலையிலே தூக்கம் ஏற்படும். நரம்பு செல்களில் இறந்த செல்கள் அதிகமானால் உடலில் உயிராற்றல் இல்லாமல் போகும். சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினைகள் ஏற்படும். இந்த இரு உறுப்புகளும் சரியான முறையில் வேலை செய்ய போதுமான ஆக்ஸிஜன் இல்லை. எனவே நரம்பு சார்ந்த, சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் ஆக்ஸிஜன் பற்றாக் குறையே.


திசுக்களில் படிந்துள்ள கார்பனை வெளியேற்ற விட்டமின் ஆ12 தேவைப் படுகிறது. எனவே உடலில் விட்டமின் ஆ12 ஆற்றல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் செல்கள் அழிந்து போகும். அப்படியானால் எந்த மாதிரி கார்பனாக இருந்தாலும் உடம்பில் இருந்து அரித்து வெளியேற்றுவது தான் முருங்கை விதையின் வேலையாகும். எப்படி துருவை எடுக்க மண்ணெண்ணெய் பயன்படுகின்றதோ அது போல் உடலில் தேங்கியுள்ள கார்பனை அரித்து வெளியேற்றும் அற்றல் முருங்கைக்கு உண்டு. இரண்டு முருங்கை விதைகளை வாயில் ஊற வைத்து மென்று சாப்பிட்டால் எப்படிப்பட்ட விடாப்பிடியான கார்பனையும் கரைத்து வெளியேற்றும்.


எதிர்மறையாக கூறப்படும் பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் நிவர்த்தி செய்யும். எதையும் முறித்து வெளியேற்றும் ஆற்றல் முருங்கைக்கு உண்டு. எந்த ஒரு எதிர்மறையான சக்தியையும் வயிற்றில் தங்க விடாது. உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிராண சக்தி சார்ந்த எதையும் வயிற்றிலிருந்து நீக்கி விடும்.


ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு ஊட்டச்சத்து உண்டு. முருங்கையில் மட்டும் தான் அனைத்து வித ஊட்டச்சத்துகளும் (விட்டமின்கள், மினரல்) அடங்கியுள்ளது. இந்த முருங்கை விதையில் மூன்று வித சுவைகள் அடங்கியுள்ளன.

1. துவர்ப்பு
2. கசப்பு
3. இனிப்பு.


நாம் முற்றிய முருங்கை விதையை வாயில் சுவைக்கும் போது


கசப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. வயிற்றில் பூச்சி
துவர்ப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. இரத்த ஓட்டம் குறைவு
இனிப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. தசைகள் பலவீனம்


யாருக்கு இந்த மூன்று சீவைகளும் சமமாக இருக்கின்றதோ உடல் சமநிலையில் உள்ளதாக அர்த்தம். இந்த முருங்கை விதையை சாப்பிட்ட உடனே குடலில் தேங்கியிருக்கும் எந்தவிதமான வாயுவாக இருந்தாலும் வெளியேறி விடும். தேவையற்ற உணவுகளை கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் கீழ் சுவாசம் பாதிப்பினால் குடலில் பூச்சிகள் தோன்றும். இந்த முருங்கை விதையை உடைத்து தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை கொடுக்கும் போது குடல் சுத்தமாகும்.


மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலி.


சிலருக்கு நடக்கும் போது தனது உடலே பாரமாகத் தோன்றும். நடப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும். இதற்கு காரணம் நம் உடலில் அதிகமான இறந்த செல்கள் இருப்பதால் நம் உடலையே நம்மால் தூக்கிக் கொண்டு நடக்க முடியாது. உயிருள்ள மனிதனை தூக்குவது சுலபமாக இருக்கும். இறந்த மனிதன் அதாவது பிணத்தை தூக்குவது மிக கடினமான செயல். காரணம் இறந்த செல்களில் பிராணன் இருக்காது, உயிராற்றல் இருக்காது. கார்பன் அதிகமாக அதிகமாக தேவையில்லாத ஜீவராசிகள் உடலில் சேர்ந்து விடும். ஒரு பொருள் கெட்டுப்போனால் அதில் பிற உயிரினங்கள் தோன்றும். எனவே உடல் பாரமாகத் தோன்றும். உட்கார்ந்து கொண்டே தூங்குதல், அதிகமாக கொட்டாவி விடுதல். இதற்கு காரணம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜனின் பற்றாக்குறையே காரணம்.


கண்களில் இறந்த செல்கள் அதிகமானால் பார்வை குறைவு ஏற்படும். தூரமானப் பொருட்கள் தெரியவில்லை எனில் கண்ணுக்குத் தேவையான விட்டமின் குறைவாக உள்ளது. இந்த அனைத்து விட்டமின்கள் நிறைந்த முருங்கை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணையை தூங்கும் போது தினமும் ஒரு துளி இரு கண்களில் விடுவதன் மூலம் கண்களில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம். கண்கள் தோலினால் ஆன ஒரு உறுப்பாகும். தோல்கள் நன்றாக இயங்க கொழுப்பு தேவை. அதாவது எண்ணெய் பசை தேவை. முருங்கை எண்ணெயில் அனைத்து விட்டமின்களும் நிறைந்துள்ளதால் அருமருந்தாகப் பயன்படுகிறது. இந்த எண்ணெயை தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் கண்ணாடியில்லாமல் படிக்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும்.


நம் உடலில் உள்ள கழிவுகளையே உணவாக உண்ணக் கூடிய உயிர்களுக்கு நுண்ணியிர்கள் என்று பெயர். நாம் உண்ணும் உணவானது இந்த நுண்ணியிர்களுக்கும் உணவாக மாறும். எனவே நாம் உண்ணும் உணவு நமக்குப் பயன்படாமல் வேறு ஜீவராசிகளுக்கு பயன்படுவதால் இரத்த சோகை நோய் ஏற்படும். இதற்கு காரணம் உடலில் குடலில் உள்ள அதிகப்படியான கார்பன்கழிவுகளே. இந்த கார்பன் கழிவுகளை நீக்க முருங்கை விதை நல்லது.


நம் உடலில் பல்வேறு இடங்களில் வாழும் நுண்ணுயிர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும். அது செல்லும் இடத்தில் அரிப்பு உணர்வினை உருவாக்கும். நம் உடலில் ஓரிடத்தில் அரிப்பு இருந்தால் நம் உடலில் கிருமிகள் தாக்கம் உள்ளது என்று பொருள். கிருமிகள் இல்லாமல் ஒருவருக்கு உடலில் அரிப்பு வராது. உடலில் சேரும் நுண்ணுயிர்கள் மூலமாகத் தான் உடலில் அரிப்பு ஏற்படும். அந்த நுண்ணுயிர்களை உடலில் இருந்து நீக்குவதற்கு முருங்கை விதை உதவுகின்றது.


இந்த நுண்ணுயிர்கள் காதில் காணப்பட்டால் காதுகளில் அரிப்பு ஏற்படும்.


மூக்கிலும் அரிப்பு ஏற்படும். பெரும்பாலும் குழந்தைகள் மலவாயினை சொரிந்து கொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள்.


வாய் பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.


ஆஸ்த்மா, மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை விதை நல்லது. குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சு திணறலுக்கு கொத்தவரங்காயுடன் முருங்கை விதையும் சேர்த்து எடுப்பது நல்லது.


முருங்கை விதை குடலை சுத்தம் செய்வதால் கீழ் சுவாசம் நன்றாக நடைபெறும். நம் உடலில் அதிகமாக கார்பனை உருவாக்கக்கூடிய முக்கியமான பொருள்களில் பால் முதன்மையானது. எனவே பால் உணவை எடுப்பவர்களுக்கு குடலில் கார்பன் சேர்க்கை அதிகமாக காணப்படும். பால் உணவினால் LACTOSE ALLERGY ஏற்படும். 100க்கு 97% லாக்டோஸ் அலர்ஜி ஏற்படும். எனவே பாலை நிறுத்தினால் அலர்ஜியை குறைக்கலாம்.

பாலும், முட்டையும் உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இது குடல் ஏற்றுக் கொள்ளாத பொருள்களாகும். எனிமா மூலம் பெருங்குடல் வரை சுத்தம் செய்யலாம். ஆனால் முருங்கை விதையின் மூலம் சிறுகுடல் வரை சென்று சுத்தப் படுத்த முடியும். முருங்கை விதையை அளவிற்கு மீறி அதிகமாக எடுத்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும். முருங்கை விதையை தினசரி எடுத்தால் குடல் சுத்தமாகும். பேதி மருந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை.

முருங்கை விதை சிறந்த "மலமிளக்கி" யாக செயற்படும்.

உடலில் இறந்த செல்கள் அதிகமானால் சாப்பிட்டால் மயக்கம் ஏற்படும்.


உடலில் ஆக்சிஜன் ஒரு அழுத்த உணர்வினை ஏற்படுத்தும். இந்த அழுத்தம் குறைந்து விட்டால் சிறுநீர் விட்டு விட்டு வெளியேறும்.


நுண்ணுயிர்கள் மூலமாக தோல் அரிப்பு மலவாய் அரிப்பு ஏற்படும்.


முருங்கை விதையின் பயன்கள்

1.உடலில் கார்பன் கழிவை வெளியேற்றும் "மலமிளக்கி"யாக செயற்படும்.
2. முருங்கை கண் மருந்து முருங்கை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கண்ணிற்கு அருமருந்தாகப் பயன்படும்
3. முருங்கை காது மருந்து முருங்கை எண்ணெய் கிராம்பு எண்ணெய் சேர்ந்த கலவை காதுக்கு சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது.

( MULTI VITAMIN OIL ) ( ORAL DROPS ) முருங்கைகார எண்ணெய் & அதன் பயன்கள்

இது முருங்கை எண்ணெய், கிராம்பு எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய்,இஞ்சி, மஞ்சள் சேர்ந்த கலவையாகும். இந்த கலவை எண்ணெய்யை 1 ஸ்பூன் வாயில் ஊற்றி கொப்பளிக்காது 30 நிமிடங்கள் அடக்கி வைத்து பின் மெதுவாக விழுங்க வேண்டும். கண்டிப்பாக உமிழ்நீருடன் கலக்க வேண்டும். இது உடலுக்கு ஊக்க மருந்து ( STEROID ) போன்று செயற்படும்.


(STEROID) என்றால் (SOLID) ஒரு பருப்பொருள் என்று அர்த்தம். அசையாத சொத்து என்று பொருள். நமக்கு கடன் அதிகமானால் அசையாத சொத்தை அசையும் சொத்தாக மாற்றி செலவு செய்வது போல் நம் உடல் பயன்படுத்திக் கொள்ளும். நாம் (STEROID)போடுகின்றோம் என்றால் நம் உடலில் உள்ள அத்தியாவசியமான சேமிப்பு கிடங்கை பயன்படுத்தி விட்டோம். அது தீர்ந்து விட்டது. எனவே நாம் நல்ல உணவுகளை எடுத்து நாம் நமது (STEROID) அளவினை உயர்த்திக் கொள்ள வேண்டும்.


இந்த மாதிரியான (STEROID) தான் (CHOLESTEROL). எனவே எண்ணெய் பசை மிக மிக முக்கியமானது. எனவே தான் வைத்தியனுக்கு கொடுப்பதை விட வானியனுக்கு கொடு என்ற பழமொழி இருந்தது. எனவே இந்த STEROID க்கு இணையான ஒரு மருந்து தான் இந்த முருங்கை கலவை எண்ணெய். இது சளி, காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கு, இருமல் போன்ற எந்த பிரச்சினையினாலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த எண்ணெயை ஒரு ஸ்பூண் எடுத்து வர பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மிக சுலபமாக நலன் பெறமுடியும். மேலும் ஒரு முறை முதல் பிரச்சினை தீரும் வரை எடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது மிக முக்கியமானது. உடனடி நமக்கு கவலையில்லை. எந்த மருத்துவ ஞானமும் தேவையில்லை. நமக்கு என்ன வியாதி, என்ன கிருமி இருக்கின்றது என்றும் தேவையில்லை.


வயதானவர்களுக்கு, நாட்பட்ட நோயாளிகளுக்கு, அதிக மாத்திரை எடுத்தவர்களுக்கு, கெட்டப் பழக்கம் உள்ளவர்களுக்கு, இந்த எண்ணெய் சிறந்த முறையில் வேலை செய்யும்.


இதை HAIR OIL ஆக பயன்படுத்தி கொள்ளலாம். புண்கள் மீது தடவலாம்.

சிறுநீரக செயல் இழப்பிற்கு சிறந்த பலனைக் கொடுக்கும். சிறுநீரில் உள்ள CREATININE அளவினை கட்டுப்படுத்தும். சிறுநீரின் அளவினை அதிகபடுத்தும். (GFR – GLOMERULUS FILTER RATIO )


குணம் : பணிவு


எந்தக் கருத்தையும் பாரபட்சம் பார்க்காமல் நடுநிலையோடு ஏற்றுக் கொண்டு தீர்மானிப்பது தான் பணிவு. யார் எந்தக் கருத்தை கூறினாலும் அதில் உள்ள நல்லதை ஏற்றுக் கொள்ளக்கூடியது தான் பணிவு. பணிவு இல்லையெனில் நம்மை நாமே அழித்துக் கொள்வோம்.


ஒரு மனிதனுக்கு அறிவில் மூன்று விதிகள் உண்டு.


1. அபிமான் ..நான் யார் தெரியுமா? என்று நினைப்பது
2. அவமான் ..தன்னால் முடியாது மற்றவரால் முடியும் என்று நினைப்பது
3. அனுமான்..கற்பனையாக நினைத்து அதுவே உண்மை என நம்புவது


இந்த மூன்று வியாதிகளும் நடுநிலைமையிலிருந்து தவறியவை. நடுநிலைமை என்பது பாரபட்சம் இல்லாமல் ஓரவஞ்சனையில்லாமல் இருக்கும் நிலை. நடுநிலையிலிருந்து தவறும் பொழுது பிரச்சினைகள் ஏற்படும். பணிவு என்பது நடிப்பு அல்ல. பணிவு என்பது யார் எதை சொன்னாலும் கருத்தை முதலில் உள் வாங்க வேண்டும். பிறருடைய கருத்தையும், குறைகளையும் நீங்கள் கேட்டால் நீங்கள் உயர முடியும்.


எனவே பணிவு என்பது நமது கௌரவத்தை விட்டுக் கொடுப்பது அல்ல. பிறருடைய கருத்துக்கு மதிப்பளிப்பது, செவி சாய்ப்பது. அப்பொழுது தான் ஒரு கருத்து நம்முள் செல்லும் போது தான் ஒரு மாற்றம் ஏற்படும். நமக்கு கேட்கக் கூடிய மனநிலை வரவேண்டும் என்றால் பணிவு இருக்க வேண்டும். நமக்கு பணிவு வர வர நமக்கு அதிக விஷயங்கள் கிடைக்கும். இதன் ரகசியமே இது தான். நாம் எந்தளவிற்கு பணிவாக இருக்கின்றோமோ அது நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். நமக்கு மனரீதியாக , ஆன்மீகரீதியாக முன்னேற்றம் ஏற்படும். இந்த பணிவு இல்லாத பொழுது எது சரி? எது தப்பு? என்று தெரியாமல் போகும். எந்த அடையாளமும் இன்றி இருளில் தள்ளப்படுவோம்.


"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்".


நாம் திமிராக இருக்கக்கூடாது. நாம் மற்றவர்களுடைய கருத்துகளுக்கும், வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். பணிவு இருந்தால் நேர்மையும், எதையும் உள்வாங்கும் மனநிலையும் இருக்கும். நாம் எதையும் கேட்காமல் காதை மூடிக் கொண்டால் நாம் வழி தவறி போக நேரிடும். எனவே நமக்கு எந்தளவிற்கு பணிவு இருக்கின்றதோ அந்தளவிற்கு புரிதலும், அனுபவமும் மேலோங்கும். நமக்கு எந்தளவிற்கு பணிவு இருக்கின்றதோ அந்தளவிற்கு நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக,திருப்தியாக வைத்துக் கொள்ள முடியும்.


சுவாசத்திற்கான பயிற்சி முறைக்கு பிராணாயாமம் என்று பெயர். இடகலை, பிங்களை சுவாசத்தின் மூலம் உடலினை சமநிலைப்படுத்த முயற்சி செய்கின்றோம். பயிற்சி செய்யும் போது மட்டுமே இது பலனைத் தரும். பிறகு நமது எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு சுவாசம் மாறிவிடும். பணிவு குணம் ஒருவரிடத்தில் இல்லாமல் நீங்கள் எத்தனை நாட்கள் சுவாச பயிற்சி செய்தாலும் சுவாசம் சமன் ஆகாது. சுவாசம் சமநிலைப்பட வேண்டும் என்றால் பணிவு இருக்க வேண்டும். பணிவு இருந்தால் நாடி சமமாக இருக்கும். எண்ணம் சீரழிந்து விட்டால் ஆரோக்கியம் சீரழிந்து தான் போகும்.


யோகா, உடற்பயிற்சி கூடம் (GYM) போன்ற இடங்களில் உடற்பயிற்சிகள் செய்வது ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக தான் என்றால் உடற்பயிற்சி, யோகம் செய்தும் ஏன் நோய்கள் ஏற்படுகின்றன? ஏன் ஒருவர் நீண்ட நாட்களாக நோயாளியாக இருந்து கொண்டிருக்கின்றார்? எனவே இதையும் தாண்டி ஒரு தவறு நடந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் அவர் ஒரு தவறான எண்ணத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


ஐப்பசி மாதத்தில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. நரகத்திற்கான அசுரன் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நரகத்திற்கான முக்கியமான அசுரன் இந்த அகங்காரம் தான். இந்த அகங்காரம் என்னும் அசுரனை அழித்து விட்டால் உங்கள் வீட்டில் லட்சுமி வரும். வளம் என்பது ஒரு மன நிறைவு. லட்சுமி என்பது நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் வைத்துக் கொள்வது. அளவிற்கு அதிகமாக வைத்துக் கொண்டு துன்பப்படாமலும், குறைவாக வைத்துக் கொண்டு சங்கடப்படாமலும் வேண்டிய அளவிற்கு வைத்துக் கொண்டு சமப்படுத்தி நிறைவாக வாழ வேண்டும். இதை தீர்மானிக்கும் சக்தி என்று கூட அழைக்கலாம்.


நாம் எந்தளவிற்கு வாழ்க்கையில் நடுநிலையாக இருக்கின்றோமோ அந்தளவிற்கு நமது வாழ்க்கை சமநிலையில் இருக்கும். அதிகமாக போகாமலும், தாழ்ந்து போகாமலும் சமநிலையில் இருக்க வேண்டும். எனவே உங்களது சுவாசம் சீராக இருக்க வேண்டும் என்றால் பிறருடைய கருத்திற்கு மதிப்பளியுங்கள்.


நாம் எந்தளவிற்கு ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றோமோ அந்தளவிற்கு நம் வாழ்க்கை இருளாக அமையும். உலகில் மூன்று கருத்துகள் உள்ளன.


1. தன்னை உணர்தல்
2. படைப்பை உணர்தல்
3. இறைவனை உணர்தல்

இந்த மூன்றையும் உணர்ந்து சமநிலையில் வாழ வேண்டும்.

எல்லாமே என்னால் கிடையாது.
எல்லாமே இயற்கையால் கிடையாது.
எல்லாமே கடவுளால் கிடையாது.

இந்த மூன்றும் இணைந்து தான் இந்த பூமியை நடத்தி கொண்டிருக்கின்றன என்ற புரிதலோடு வாழக்கூடிய பக்குவம் வேண்டும். எல்லாமே கர்ம விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டிருக்கின்றது. இறைவனே இந்த பூமியில் ஒரு மாற்றம் செய்தாலும் ஒரு விதிக்கு உட்பட்டு தான் செய்வார். எனவே பணிவு என்பது வேண்டும். எதன் தன்மை எப்படி மாறுகிறது என்ற பக்குவம் வேண்டும். அப்படி இருந்தால் பிரச்சினைகள் ஏற்படாது. இல்லையென்றால் இந்த நிலை ஒரு அசுரத் தனமாக இருக்கும். இதைத் தான் நரகாசுரன் என்று அழைக்கிறார்கள். இதையே நாம் தீபாவளி திருநாளாக கொண்டாடுகிறோம்.


இதன் அடிப்படை என்னவென்றால் சரியான புரிதல் இல்லாமல், யார் யாரால் இயக்கப்படுகிறார்கள் என்று தெரியாமல், தானும் குழம்பிக் கொண்டு, மற்றவர்களையும் குழம்பிக் கொண்டு, இந்த உலகின் தன்மையினை தவறு, தவறாக புரிந்து கொண்டு வாழ்வது தான் காரணம். எனவே அகங்காரம் நாசத்தினை தான் ஏற்படுத்தும். எனவே பணிவு இல்லையென்றால் நம்மை நாமே அழித்துக் கொள்வோம். இது போன்ற குணம் உடையவர்களுக்கு சுவாசத்தில் பாதிப்பு ஏற்படும்.

மண்டலம் : சுவாச மண்டலம்
குணம் : பணிவு
மாதம் : ஐப்பசி
செயல்பாடு : உடலுக்கு உயிரோட்டம்

முருங்கைக்காய் பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்





–:––












Displaying 07 Drumstick.mp3.

Click to Download

முருங்கைக்காய் பாடல் வரிகள்


குடல் சுருங்கி விரிந்தால் கீழ் மூச்சு
ஈரல் சுருங்கி விரிந்தால் மேல் மூச்சு
இவை இரண்டும் நன்றாக செயல்பட முருங்கை இருக்குது

மலம் தான் கழிந்தது, தலை வலி போனது
புழுக்கள் அழிந்தது அரிப்புகள் நின்றது

புது மூச்சை படைப்பதாலே முருங்கை இறைவனே -2
நாட்பட்ட ஆஸ்துமாவை நிமிடத்தில் நீக்கிடும் முருங்கை நான்

குடல் சுருங்கி விரிந்தால் கீழ் மூச்சு
ஈரல் சுருங்கி விரிந்தால் மேல் மூச்சு
இவை இரண்டும் நன்றாக செயல்பட முருங்கை இருக்குது



Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

எலுமிச்சை!  

எலுமிச்சை

எலுமிச்சை பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்





–:––












Displaying 10 Lemon.mp3.

Click to Download


உங்கள் அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவை எங்களுடன் பகிர்ந்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும் service@vegetableclinic.com

நாளமில்லா சுரப்பிகள் என்றால் என்ன?


நம் உடலில் சுரப்பிகள் ஹார்மோன்களை சீராக்குகின்றன. இந்த சுரப்பிகள் தன்னுடைய தன்மையில், சமநிலையில் மற்றும் இறுக்கமாக இருக்க வேண்டும். ஒரு பொருளை நாம் பாதுகாக்க உறைநிலையில் வைக்கின்றோம். நம் உடம்பில் சில உறைநிலை இடங்கள் உள்ளன. அந்த இடத்தில் ஒரு பொருளை வைத்தால் அது கெட்டு போகாமல் பத்திரமாக இருக்கும். நாம் உண்ணும் உணவில் உள்ள முக்கியமான ஊட்டசத்துக்கள் நம் உடம்பில் சேமித்து வைக்கும் இடத்திற்கு உறைநிலை இடங்கள் என்று பெயர். நம் உடம்பிற்கு எப்பொழுது தேவையோ அதை உடல் மீண்டும் எடுத்துக் கொள்ளும். நாளமில்லா சுரப்பிகள் தான் நமது உடலின் உறைநிலை இடங்கள். உதாரணமாக பிட்யூட்டரி, பீனில், தைமஸ், அட்ரினல் போன்றவை நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளாகும்.

நாளமில்லா சுரப்பிகளின் பணி


இந்த சுரப்பிகள் எப்பொழுதும் ஒரு சமநிலையில் இருக்க வேண்டும். இந்த சுரப்பிகள் உடலில் மிக முக்கியமான பணியினை செய்கின்றன. இந்த சுரப்பிகளின் தன்மையை நாம் வேகப்படுத்தவும் கூடாது, குறைக்கவும் கூடாது. அது தன் இயல்பான நிலையில் இயங்க வேண்டும். அப்படி இல்லாமல் நாம் அதை மாற்ற முனைந்தால் உடலில் தேவையில்லாத கோளாறுகள் ஏற்படும்.


நாளமில்லா சுரப்பிகள் நமது உடலை ஒட்டு மொத்தமாக கட்டுப்பாட்டில் வைக்கின்றது. ஹார்மோன் பாதிப்பினால் உடல் தனது கட்டுப்பாட்டை இழக்கும். ஹார்மோனில் பாதிப்பு ஏற்பட்டால் ஒரு குறிப்பிட்ட வேலையில் பாதிப்பு ஏற்படும். மனமும், உடலும் கட்டுப்பாட்டை இழக்கும். உடல் ஒரு வேலையை செய்யும், மனம் ஒரு வேலையை செய்யும். உடலையும், மனதினையும் ஒருங்கிணைப்பது தான் ஹார்மோன்கள். அதாவது உடலில் ஏற்படும் மாறுபாடு மனதினை பாதிக்கும். மனதில் ஏற்படும் பிரச்சனை உடலை பாதிக்கும்.


நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் முக்கியமான பணி, நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதை அப்படியே உடலில் வெளிப்படுத்தி உடலில் உபாதைகளாக காட்டும்.

மனதில் ஏற்பட்ட குழப்பம் உடலில் தாக்கம் ஏற்படாமல் இருக்க புடலங்காய்.
உடலில் ஏற்பட்ட ஒரு மாறுபாடு மனதினில் தாக்கம் ஏற்படாமல் இருக்க எலுமிச்சை பழம்.


உங்களுக்கு உடலா, மனமா எதனால் பிரச்சனை என்று வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை என்றால் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் உடல் மனம் இரண்டு பிரச்சனைகளும் தீரும். எலுமிச்சை நமது மொத்த உடலையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். இது அவசர காலத்தில் ( ஐ.சி.யு ) போல் வேலை செய்யும். ஒருவருக்கு என்ன பிரச்சனை என்றே தெரியாவிட்டால் அவரை காப்பாற்ற (மயக்கம்,வாந்தி, தலைசுற்றல், சுரம், வயிற்றுப்போக்கு ) ஒரு எலுமிச்சை பழத்தினை தோலுடன் அரைத்து குடித்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். உடம்பில் அவசர காலத்தில் கால்சியம், இரும்பு சத்துக்கள் உடம்பில் வேலை செய்யும். எலுமிச்சை இதனை உடம்பில் இருந்து வெளிப்படுத்தி பிரச்சனைகளை சரி செய்து விடும். இது மிகப்பெரிய அதிசயம் செய்யும்.


அந்த காலத்தில் நடைப்பயணமாக செல்லும் போது வழியில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கலாம் என்று எண்ணி எலுமிச்சை பழத்தினை உடன் எடுத்து செல்வார்கள். ஏதாவது உடலில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை கடித்து சாப்பிட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். போகும் வேலை தடையில்லாமல், பிரச்சனைகள் இல்லாமல் போய் சேர்வதற்காக எலுமிச்சையை பயன்படுத்தினர். எனவே எலுமிச்சை என்பது ஒரு எமர்ஜென்சி. இதை தோலுடன் சாப்பிடும்பொழுது எந்த பிரச்சனையானாலும் தீர்த்து விடும். இதில் முக்கியமானது தோல் தான். எனவே எலுமிச்சையை நம்பி நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். உங்களை மருத்துவமனைக்கு செல்லாமல் தடுக்கும் அற்புதமான சக்தி எலுமிச்சைக்கு உண்டு. மற்ற காய்கள் உடலினை உறுதி செய்ய சாப்பிடலாம். ஆனால் அவசர காலத்திற்கு எலுமிச்சை முக்கியமானது.


திடீர், திடீர், என்று ஏற்படும் நிகழ்வுகள் அதாவது ஒரு சிலருக்கு திடீரென்று கண் தெரியாது, காது கேட்காது. அதாவது எதிர்பாராமல் உடலில் ஏற்படும் வேதியல் மாற்றத்திற்குஎலுமிச்சை பயன்படும்.


நாம் உண்ணும் உணவின் சக்தி ஹார்மோனில் சென்று அடைவதற்கு எலுமிச்சை சாப்பிட வேண்டும்.


நாம் உண்ட உணவின் சக்தி எலும்பு, எலும்பு மஜ்ஜையில் சென்று அடைவதற்கு கொப்பரை தேங்காய் சாப்பிட வேண்டும்.


இப்பொழுது நாம் ஹார்மோன் வளர்ச்சிக்காக கொடுக்கும் மருந்துகளால் ஹார்மோனில் சமநிலை ஏற்படுத்த முடியவில்லை. ஹார்மோனின் சமநிலைக்கு எலுமிச்சை தோல். எலுமிச்சையின் முழுமையான சத்து அதன் தோலில் தான் அடங்கியுள்ளது. ஆனால் நாம் ஜுஸை குடித்து விட்டு தோலை எறிந்து விடுகின்றோம். நாம் ஜுஸ் குடிக்கும் பொழுது 10ல் 1 பங்கு தான் பலன் கிடைக்கும்.


இந்த சுரப்பிகளின் சமசீரற்ற நிலைக்கு முக்கிய காரணங்கள் நமது எண்ணங்கள் அதிக அளவிற்கு பாதிப்பாகும் போதும், அவசரப்படும் பொழுதும், நமது மனதை கடுமையாக வருத்தும் பொழுதும் இந்த சமசீரற்ற நிலை ஏற்படும். எலுமிச்சையால் ஏற்படும் பயன்கள்


குடலில் ஹார்மோன் மாற்றத்தினால் செரிமானம் பாதிப்பாகி வாந்தி எடுத்தால் தான் தலைவலி போகும் என்ற நிலைக்கு எலுமிச்சை உதவி புரியும்.


எலுமிச்சை தோலின் பயன்கள்


நரம்பு .. திடீரென்று ஏற்படும் தலைசுற்றல்

கண் .. திடீரென்று பார்வை இழப்பு


காது .. திடீரென்று செவித்திறன் குறைவு. காதுவலி.


தேவையில்லாத இடங்களில் தசை வளர்ச்சி, மூக்கில் தசை வளர்தல், குடலில் தசை வளர்தல் தேவையான இடத்தில் தசை வளராமல் தேவையில்லாத இடத்தில் தசை வளரும். நம் நிலையில் எங்கோ தடுமாறி நமது செயல்கள் வேறு மாதிரியாக இருக்கும். எது அவசியம், எது அனாவசியம் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தால் தேவையில்லாத இடங்களில் தசை வளரும். தொண்டை வலி ஏற்படும்.

தொண்டை அடைப்பிற்கு .. கோவைக்காய்
தொண்டை வீக்கத்திற்கு .. கொத்தவரங்காய்
தொண்டை வலிக்கு .. எலுமிச்சை


இந்த மூன்றும் சேர்ந்து எடுக்கும் பொழுது தொண்டை அனைத்து பிரச்சனைகள், டான்சில் சரியாகும்.


அமர்ந்தால் மூச்சு திணறல் ஏற்படும். அவர்களால் உட்கார முடியாது. படுத்துக் கொள்வார்கள். எப்பொழுதும் ஒரு மயக்க நிலையில் இருப்பார்கள். அவர்களால் உட்கார முடியாது.

சிலரால் படுக்க முடியாது. மூச்சு திணறல் ஏற்படும். உட்கார்ந்து கொள்வார்கள். அவர்களுக்கு புடலங்காய்.


செரிமானமின்மையால் சாப்பிட முடியாது, குடிக்க முடியாது. 1 சொட்டு தண்ணீர் குடித்தால் கூட வாந்தி ஏற்படும். திடீரென்று ஏற்படும் வயிற்று போக்கு.


சிறுநீரில் தேவையற்ற துகள்கள் அழுக்காக வெளியேறும்.


தோலில் சுருக்கம் ஏற்பட்டு வயதோதிக தன்மையை ஏற்படுத்தும் என்றும் இளமையாய் இருக்க எலுமிச்சை, வாழைக்காய்.

குணம் : பொறுமை


நோய் உருவாக முக்கிய காரணம் நமது எண்ணங்கள். குணங்கள் தான் ஆரோக்கியம். அவகுணங்கள் உடலில் நோயினை உருவாக்கும். அந்த குணங்களை மேம்படுத்துவதற்காகத் தான் விரதம் இருத்தல், பத்திய சாப்பாடு சாப்பிடுதல், காவடி எடுத்தல் போன்றவை நமது குணத்தை மேம்படுத்துவதற்காக பக்தி மார்க்கத்தில் கையாண்ட எளிய வழிமுறைகளாகும். இது மனிதனின் மனதையும், உடலையும் சரியான நிலையில் வைத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. நாம் அரிய பொக்கிஷங்களை இந்த பூமியிலிருந்து பெற வேண்டும் என்றால் பொறுமை வேண்டும்.


நமது உடலின் ஹார்மோன்களின் சமநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம், இயற்கையானாலும் சரி நமது வாழ்க்கையானாலும் சரி நாம் ஒரு காலத்தை நிர்ணயம் செய்கின்றோம். நாம் ஒரு விதையை போட்டால் ஆறு மாதத்தில் பலன் வர வேண்டும் என்றால் நாம் அதை மூன்று மாதத்தில் எதிர்பார்க்கின்றோம். எனவே நாம் உண்மையான காலநிலையினை உடைத்து நமக்கு வேண்டிய காலத்தில் பயன்படுமாறு செய்ய நிர்ப்பந்தம் பண்ணுகின்றோம். அதனால் தான் நமக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அந்த பயிர் இயற்கையாக தானாகவே வளர்ந்து பயன் தரும். ஆனால் நாம் பொறுமையின்மை காரணமாக முன்னதாக பெற முயற்சிப்பது தவறு.


வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சமயத்தில் வெற்றி கிடைக்கும். ஒருவருக்கு முன்னதாக வரலாம். ஒருவருக்கு நடுவில் வரலாம். சிலருக்கு இறுதியில் வரலாம். உற்பத்தி செய்யும் பொருளை போல ஒரே சமயத்தில் ஒரே மாதிரியாக வரமுடியாது.


எனவே தேவையில்லாமல் மனதினை பதட்டப்படுத்தி அவசரப்படுத்துவதால் தான் ஹார்மோன்கள் சமநிலை இழந்து விடுகின்றது. நாம் ஓட்டும் வாகனம் அதிக வேகத்தில் ஓட்டும் பொழுது கட்டுப்படுத்த முடியாது. சீரான வேகத்தில் செல்லும் போது எளிமையாக கட்டுப்படுத்த முடியும். அதுபோல் எப்பொழுது நமது எண்ணங்கள் மிகத் தீவிரமான நிலையில் போகும் போது நமது ஹார்மோன் சமநிலையை இழக்கும்.


நமது ஹார்மோனின் சமநிலை இழப்பிற்கு ஒரு முக்கியமான காரணம் நமது தொலைகாட்சி பெட்டியாகும். நமது வாழ்வியலுக்கு பொருந்தாத ஒரு நிகழ்வைக் காட்டி மனதினை கலைத்து யதார்த்தம் இல்லாத வாழ்க்கையை வாழ வைக்கிறது. அவசரப்படுத்துகின்றது. இது நமது ஹார்மோனின் சமநிலை மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.


ஒருவரின் மனநிலையை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. உதாரணமாக நமது இன்றைய பெண்களின் தற்போதைய நிலை மாதவிலக்கு வருவதற்கு ஒரு மாத்திரை, வராமல் இருக்க ஒரு மாத்திரை, தேவைப்பட்டால் தள்ளி போட ஒரு மாத்திரை, நன்றாக வராததற்கு ஒரு மாத்திரை போட்டு உடலை ஒரு இயந்திரமாக மாற்றி வருகிறார்கள்.


அந்தக் காலத்திலும் பெண்களுக்கு மாதவிலக்கு வந்தது தான். அவர்கள் அதை எப்படி கையாண்டார்கள். இந்த மாதம் பூஜை இருக்கின்றது, மனதில் வைராக்கியம் வைத்தால் அது வராது. மனோபலம் இருந்தது. அந்த மனோபலத்தால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அந்தளவிற்கு ஆற்றலுடன் இருந்தார்கள். இப்பொழுது தொட்டதற்கெல்லாம் மாத்திரை சாப்பிடும் நிலைக்கு ஆளாகி விட்டார்கள். அப்படியானால் நம்மிடம் ஒன்றுமேயில்லை. நமது எண்ணத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம், யார் வேண்டுமானாலும் வெளியே செல்லலாம். நமக்கு என்று எந்த தடுப்பும் இல்லை.


நமக்கு உடலில் உள்ள ஏழு விதமான சுரப்பிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் வேண்டும். தை மாதத்தில் ரத சப்தமி என்ற விழா கொண்டாடப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரை சூரியன் ஓட்டுவது போல் சித்தரிக்கப்படுகிறது.


எனவே சுரப்பிகளை நிர்வாகம் செய்ய பொறுமை வேண்டும். நிதானம் வேண்டும்.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை
இகழ்வாரைப் பொருத்தல் தலை.


எனவே நமக்குப் பொறுமை வேண்டும். இல்லையெனில் நாம் தொந்தரவு மற்றும் மாற்றத்திற்கு தூண்டப்படுவோம். மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும். எனவே நாம் நாளமில்லா சுரப்பிகளை நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கு தொலைகாட்சி பெட்டியை தவிர்த்தால் நல்லது. நமக்கு மனநிம்மதி தான் முக்கியம். தேவையில்லாத தகவல்கள் நமக்கு பயன்படாது. ஆக்க பூர்வமாக வேலை செய்ய வேண்டும். அதிகமான தகவல்களை தெரிந்து கொள்வதால் எந்த பலனும் இல்லை. நம்மால் எதை செய்ய முடியுமோ அதை தான் நாம் செய்ய முடியும். செய்யவே முடியாத ஒரு விஷயத்தை பற்றி யோசனை செய்வதில் எந்த நன்மையும் இல்லை.


தொலைக்காட்சி மூலம் தவறாக பார்க்கப்படும், கேட்கப்படும் நிகழ்ச்சிகளால் தவறான எண்ணங்களை பரப்பினால் அந்த வீட்டில் எப்படி நல்லது நடக்கும். எல்லாவிதமான அசம்பாவிதங்கள் நடப்பதற்கும் நாம் நம்மை தயார்படுத்தி கொள்கிறோம்.


எப்படி பச்சைமிளகாய் வயிற்றுக்குள் சென்று உடலை பாதிப்பிற்குள்ளாகிறதோ, அதே போன்று தொலைக்காட்சி பெட்டி பார்வையாலே நம்மை பாதிப்பிற்குள்ளாக்குகின்றது. இது எந்தளவிற்கு ஒரு மனிதனை பாதிப்பிற்குள்ளாக்குகிறது என்றால் நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய அவனுடைய எந்தவிதமான யதார்த்தத்தையும் ஏற்றுக் கொள்ள மாறுகின்றான். தொலைக்காட்சியில் பார்ப்பதை எல்லாம் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து விடுகின்றான்.


தொலைக்காட்சியின் விளைவு ஹார்மோன் வரை பாதிப்புகளை உருவாக்குகிறது. அடுத்ததாக தற்பொழுது வரும் குழந்தைகள் தான் தோன்றிதனமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். கர்ப்பமான ஒரு பெண் தொலைக்காட்சியில் வரும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளையும் பார்க்கும் பொழுது அவர்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படியிருக்கும். நமது புலன்களுக்கு தேவையில்லாமல் இவ்வளவு விஷயங்களை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்வியல் தவறாக இருந்தால் நோயை குணப்படுத்துவது கடினம்.


சாப்பிட்ட உணவு சீரணிப்பது சேர்த்து, மற்ற விஷயங்களையும் சீரணிக்கப்பட வேண்டும். அது தேவையில்லாமல் எண்ணங்களை உற்பத்தி பண்ணுகிறது. எனவே எதிர்காலத்தில் என்ன மாதிரி வேண்டுமானாலும், ஜீன் , ஹார்மோனில் மாற்றம் வரலாம். இதற்கு முக்கியமான பெரிய பொறுப்பு தொலைக்காட்சி பெட்டிக்கு உண்டு. தொலைக்காட்சி பெட்டி நமது மனதில் ஒரு களங்கத்தை, ஒரு நெருடலை ஒரு கசப்புத் தன்மையை தேவையில்லாத அதிர்வுகளை தேவையில்லாத எண்ணங்களை தறிகெட்டு ஓட விடுகின்றது.


ஒவ்வொரு கோவிலிலும் ஒரு கொடி மரம் இருக்கும். மூன்று வித உலகங்கள் இருக்கின்றது. அவை


1. பொருள் நிறைந்த உலகம்
2. சூட்சம உலகம்
3. ஆன்ம உலகம்


நாம் இருப்பது ஸ்தூலமான பொருள் உலகம். நம் ஆன்மா எங்கிருந்து வந்ததோ அந்த ஆத்ம உலகத்திற்கு செல்ல வேண்டும். அந்த ஆத்ம உலகத்திற்கு செல்லும் இடம் அமைதியானது. அது வெட்டவெளி என்றும், அமைதி உலகம் என்றும் அழைக்கப்படுகிறது. அமைதி உலகம் தான் ஆன்மாவிற்கு சக்தி.


நாம் யாரும் இந்த தேசத்து மக்கள் இல்லை. நாம் அனைவரும் ஆன்ம தேசத்திலிருந்து பூமிக்கு வந்து இருக்கின்றோம். மீண்டும் ஆன்மலோகத்திற்கு திரும்பி செல்வோம் என்ற கருத்தை நிலைநாட்டும் அடையாளம் தான் கொடிமரம்.


இங்கு நடப்பவை எல்லாம் ஆன்மாவில் பதியும். எனவே அந்த பதிவுகளை என்றுமே ஒட்டாமல் வைத்துக்கொள்ள வேண்டும். ஆத்மதேசம் நம் நினைவில் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். இது நம் தேசம் இல்லை. இந்த தேகமே நமக்கு கிடையாது என்னும் போது யாரிடம் போய் என்ன உரிமை கேட்பீர்கள். நாம் அனைவரும் ஒரு பொழுது போக்கிற்காக வந்துள்ளோம். எனவே வாழ்க்கை என்பது ஒரு பொழுதுபோக்கு. அந்த பொழுதுபோக்கை இவ்வளவு விபரீதமாக,கடினமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை, அதில் நியாயமும் இல்லை. அந்த அமைதி நிலையில் இருக்கும் பொழுது எல்லாம் வெளிச்சத்திற்கு வரும். அமைதி சாந்தி என்று அழைக்கப்படுகிறது. ஆன்மாவின் உண்மையான தர்மம் சாந்தி. ஆன்மா அமைதியை விரும்புகிறது. அந்த அமைதியை கலைக்கக்கூடாது. அமைதியை கலைத்தால் கூடு உடைந்து விடும். மனிதத் தன்மையை இழந்து விடுவோம்.


மண்டலம் : நாளமில்லா சுரப்பி மண்டலம்
குணம் : பொறுமை
மாதம் : தை
செயல்பாடு : மொத்தக் கட்டுப்பாடு


எலுமிச்சை பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்





–:––












Displaying 10 Lemon.mp3.

Click to Download

எலுமிச்சை பாடல் வரிகள்


பொட்டு வைத்த ஓர் மஞ்சள் பழம்
அது எலுமிச்சை என்னும் சாமி பழம் – 2

என் மனதில் சுகம் வந்ததம்மா
என்றும் அமைதி தந்து ஆளுதம்மா
தோல் வேண்டுமே அதன் தோல் வேண்டுமே
தோல் தான் தேவை

பொட்டு வைத்த ஓரு மஞ்சள் பழம்
அது எலுமிச்சை என்னும் சாமி பழம்
என் மனதில் சுகம் வந்ததம்மா
என்றும் அமைதி தந்து ஆளுதம்மா

நில்லாத வாந்தி உடன் நிற்கும் நிலை மாறும்
நில்லாது போகும் மலம் நிற்கும் நிலை மாறும்
திடீரென்று போன கண்பார்வை திரும்பும்
திடீரென்று போன கேட்கும் திறம் திரும்பும்
சதை வளர்ச்சி குறை வளர்ச்சி
விடை காணும் என்னாலும்

பொட்டு வைத்த ஓரு மஞ்சள் பழம்
அது எலுமிச்சை என்னும் சாமி பழம்
என் மனதில் சுகம் வந்ததம்மா
என்றும் அமைதி தந்து ஆளுதம்மா
தோல் வேண்டுமே அதன் தோல் வேண்டுமே
தோல் தான் தேவை

பொட்டு வைத்த ஓரு மஞ்சள் பழம்
அது எலுமிச்சை என்னும் சாமி பழம்
என் மனதில் சுகம் வந்ததம்மா
என்றும் அமைதி தந்து ஆளுதம்மா


நாளான தைராய்டு மாறும் சரியாகும்
நாளான தோல் சுருக்கம் நீங்கும் நிலைமாறும்
அழுக்கான சிறுநீர் தெளிவாக போகும்
அழுக்கான ஈரல் மறுவாழ்வு ஏற்கும்
விடைதாள்கள் கையில் கொண்டு
வினாத்தாள் பற்றி பயம் ஏன்?


பொட்டு வைத்த ஓர் மஞ்சள் பழம்
அது எலுமிச்சை என்னும் சாமி பழம்
என் மனதில் சுகம் வந்ததம்மா
என்றும் அமைதி வந்து ஆளுதம்மா

தோல் வேண்டுமே அதன் தோல் வேண்டுமே
தோல் தான் தேவை

பொட்டு வைத்த ஓர் மஞ்சள் பழம்
அது எலுமிச்சை என்னும் சாமி பழம்
என் மனதில் சுகம் வந்ததம்மா
என்றும் அமைதி தந்து ஆளுதம்மா



உங்கள் அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவை எங்களுடன் பகிர்ந்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும் service@vegetableclinic.com
காய்கறிகள்
வெண்பூசணி
கத்தரிக்காய்
கொத்தவரங்காய்
புடலங்காய்
அரசாணிக்காய்
கோவைக்காய்
முருங்கைக்காய்
பீர்க்கன்காய்
தேங்காய்
எலுமிச்சை
வெண்டைக்காய்
வாழைக்காய்

About Us
Vegetable are rich source of soluble, insoluble and resistant fibers. Fibers play a major role in body anabolism, metabolism and catabolism. Each and every vegetable have their own unique property which serves as a life saving medicine for a specific disease or disorder. It is time to pick up which vegetable suits for us the most to achieve complete health. Vegetableclinic.com simplifies this task by fixing an appointment with the physician and communicating through online or meeting him in person Read More
Recent Posts
வெண்பூசணி
கத்தரிக்காய்
கொத்தவரங்காய்
புடலங்காய்
அரசாணிக்காய்
கோவைக்காய்
முருங்கைக்காய்
பீர்க்கன்காய்
தேங்காய்
எலுமிச்சை
வெண்டைக்காய்
வாழைக்காய்
Contact Us
+919994443517
service@vegetableclinic.com
132,Co-Operative Colony,
Uppilipalayam,
Near Trichy Road,
Rajalakshmi Mills Bus Stop,
(Opp.Street of SBI ATM, North Side of Perks School)
Coimbatore - 641 015
Consulting - 12 noon - 6 pm
Thursday Holiday


Copyright © 2015 vegetableclinic.com


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Elumichai !  

https://doc-00-1c-docs.googleusercontent.com/docs/securesc/2q248ehevuh0rrgmg8pakcq0aeisr8e9/0liar7ooplqr7sndru7viioufqb47mqa/1542412800000/12778212990314183514/12889511570086398626/14vBKy8MXRY4RUxZyc4ZaHcMjcTiOHJQn?e=download

Shared via the Google app


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Vazakki song! 

https://drive.google.com/file/d/1A2882aoC4sJ53LTIRDx6VezUdH8C-g8M/view?usp=drive_open

Shared via the Google app


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

வெண்டைக்காய் !  

வெண்டைக்காய்

வெண்டைக்காய் பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்





–:––












Displaying 11 Ladies finger.mp3.

Click to Download


உங்கள் அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவை எங்களுடன் பகிர்ந்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும் service@vegetableclinic.com
நாளமுள்ள சுரப்பி


நாளமுள்ள சுரப்பி என்பது ஒரு சுரப்பி சுரந்து ஓரிடத்தில் சேமிப்பாகி வெளிப்படும். நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று அருந்தும் தண்ணீர் உள்ளே செல்கிறது. இவைகள் ஒரு குழாயின் மூலம் கடந்து செல்கிறது. ஒரு பொருள் ஓர் இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்லும்போது உராயாமல் மென்மையாக செல்ல வேண்டும். தோலுடன் சளி சவ்வு படலம் என்ற அமைப்பு இருக்கிறது. அது அந்த உராய்வுத் தன்மையிலிருந்து பாதுகாத்து கொள்கிறது. ஒரு ஈரப்பதத்தினை ஏற்படுத்தி உள்ளுறுப்புகளுக்கு தீங்கு நேரா வண்ணம் பாதுகாக்கிறது. எங்கெல்லாம் தோல் இருக்கிறதோ அதன் அடியில் இந்த சுரப்பி மண்டலம் அமைந்துள்ளது. எனவே எல்லா இடத்திலும் இந்த சுரப்பி மண்டலம் இருக்கும். எனவே நாளமில்லா சுரப்பி மண்டலம் மிகப் பெரியது.


இந்த சுரப்பிகள் எண்ணெய் மற்றும் தண்ணீரை கலந்து வைத்திருக்கின்றது. தேவைப்படும் பொழுது எண்ணெய் பசை மற்றும் ஈரப்பதத்தினை மாற்றி மாற்றி அளிக்கிறது. உடலில் எப்பொழுதுமே ஈரபதத்தினை தக்க வைக்க பசை போன்ற திரவம் தேவை. இந்த ஜெல் இல்லையெனில் உடலில் ஈரபதத்தினை தக்க வைக்க முடியாது மற்றும் எண்ணெய் பசையும் இருக்காது. எனவே உடல் ஈரப் பதம் இல்லாமல் காய்ந்து விடும். இதனால் உராய்வு ஏற்படும். எந்த பொருளும் உராயும் போது சப்தம் ஏற்படும். சப்தம் வரும்பொழுது,எண்ணெய் போட்டால் சப்தம் குறையும். நமது உடலில் சளி ஜவ்வு படலம் வரண்டு போனால் குறட்டை, விக்கல் போன்றவை ஏற்படும். உடலுக்கு ஈரப்பதம் வேண்டும் என்றால் விட்டமின் ஆ3 தேவை. எனவே வெண்டைக்காயினை சாப்பிடும் பொழுது மீண்டும் அந்த ஜெல் உற்பத்தியாகும். அது செல்லக்கூடிய பாதை சுமுகமாக நடைபெறும்.


நாம் உண்ணும் உணவில் தேவையற்ற பொருள்களினால் (மிளகாய்) உடலில் உள்ள சளி ஜவ்வு கரைந்து வெளியேறி விடுகிறது. எனவே உடலில் ஈரபதத்தினை தக்க வைக்க முடியாது. உடலில் எண்ணெய்பசை குறைவதால் ஈரபதம் குறையும். அது போல சளி ஜவ்வு படலம் இருந்தால் தான் உடலில் சுமுகமான முறையில் பொருட்களின் பரிமாற்றம் நடைபெறும். இல்லையெனில் காய்ந்து போன நிலை ஏற்படும்.


நம் உடலில் ஈரபதத்தினை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய மூன்று விஷயங்கள் உள்ளன. அவை.


1. நீர்
2. காற்று
3. இரத்தம்


நீரை வறட்சியில்லாமல் பாதுகாக்க .. வெண்டைக்காய்
இரத்தத்தின்சூடு குளிர்ச்சி தன்மையை பாதுகாக்க .. கொத்தவரங்காய்
காற்றில் உள்ள வெப்ப தன்மையை பாதுகாக்க .. முருங்கைக்காய்


இந்த மூன்றின் வெப்ப நிலையும் சரியான முறையில் இருக்க வேண்டும். இந்த வெப்ப நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் சளி பிடிக்கும்.

வெண்டைக்காய் சாப்பிடுவதால் தீரும் பிரச்சனைகள்

தலையில் ஈரபதம் இல்லாததால் வெய்யிலில் சென்றால் தலைவலி ஏற்படும்.

நரம்பு .. உடலில் ஈரபதம் இருந்தால் தான் செய்தி பரிமாற்றம் நடைபெறும். ஈரபதம் குறைந்தால் சிக்னல் போகாது. நரம்புகளில் அதிகமாக நீர் இருந்தால் கைகளில் நடுக்கம் ஏற்படும். ஈரபதம், நீர் இல்லையெனில் கை, கால்கள் மரத்து போகும். சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தண்ணீர் குடிப்பது, சிறுநீர் கழிப்பதுமாக இருப்பார்கள். இதனால் உடலில் ஈரபதம் குறைந்து விடுவதால் கை, கால்கள் மரத்துப் போகும்.


கண் .. ஈரபதம் குறைந்தால் கண் மங்கலாக தெரியும்.

காது .. ஈரபதம் குறைவதால் காதுகள் தற்காலிகமாக அடைத்துக் கொள்ளும்.
காது .. நிரந்தர அடப்பிற்கு காரணம் .. வெப்பம். கொத்தவரங்காய் சாப்பிடவும்.


மூக்கு .. மூக்கில் உள்ள சளி காய்ந்த உலர்ந்த நிலை ஏற்படும்.


வாய் .. வறட்சியாக இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார்கள்.


தொண்டை வறட்சி, நெஞ்சில் வறட்சியினால் வரட்டு இருமல் ஏற்படும். உதரவிதானத்தில் ஈரபதம் குறைந்தால் சாப்பிடும் பொழுது விக்கல் ஏற்படும். அதனால் விக்கல் ஏற்பட்டால் தண்ணீர் குடிக்க சொல்வார்கள்.


குடலில் ஈரபதம் குறைந்தால் உணவு உண்ண செல்லும் பொழுது எரிச்சல் ஏற்படும். குடலில் உள்ள சளி ஜவ்வு கரைந்து போய் விடும். அடிக்கடி மலம் கழிப்பார்கள். சாப்பிடும் முன், சாப்பிட்ட பிறகு என்று அடிக்கடி மலம் கழியும். குடலால் மலத்தினை தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலையில் அடிக்கடி மலம் கழிப்பார்கள். இந்த நிலை ஐ.பி.எஸ் என்று அழைக்கப்படுகிறது.


அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். மேலும் உடல் ஈரபதத்தினை இழக்கும்.


தோலில் வறட்சி ஏற்படும்.


உடலில் சளிஜவ்வு படலம் இல்லையெனில் அதிக உராய்வினால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.


குணம் : திருப்தி


ஏன் உடலில் வறட்சி ஏற்படுகிறது? ஆக ஏன் ஏற்படுகிறது? திருப்தி அதிருப்தி. மனம் எப்பொழுது திருப்தி அடையும்? அதிருப்தி இருந்தால் உடல் வறண்டு விடும். திருப்தி எப்பொழுது கிடைக்கும்?


என்னைப் பற்றி அவர் எண்ண நினைக்கின்றார், இவர் என்ன நினைக்கின்றார், என்னைப் பற்றி யார் யாரெல்லாம் என்ன நினைக்கின்றனர் என்று யோசனை செய்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக சந்தோஷம் வராது. நான் வாழும் வாழ்க்கை முதலில் எனக்கு திருப்தியாக இருக்கின்றதா என்பதை முடிவு செய்ய வேண்டும். எனவே கௌரவம் தான் மிகப் பெரிய பிரச்சனை. "மரியாதை மற்றும் சுயமரியாதை" பிறருக்கு சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ நாம் மரியாதை கொடுப்போம். ஆனால் உண்மையில் மரியாதை யாருக்கு யார் கொடுக்க வேண்டும்? நமக்கு நாமே மரியாதை கொடுத்துக் கொள்ள வேண்டும். அன்பு என்பது பரந்து விரிந்தது. எல்லோருக்கும் கொடுக்கக் கூடியது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு கொடுப்பது அன்பு. ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் மரியாதையை பகிர்ந்து கொடுக்க முடியாது. மரியாதை என்பது அவர் அவர்களால் தனக்குத் தானே கொடுத்துக் கொள்வது. நான் செய்யும் ஒரு செயலை மற்றவர்கள் பார்த்து என்ன நினைக்கிறார்கள் என்ற எண்ணம் வந்து விட்டால் அது மிகப் பெரிய பிரச்சனையாக மாறும்.


நமக்கு என்ன உணர்வு வேண்டும் என்றால் இந்த உடல் அழியக்கூடியது. என்னுடைய பெயர், விலாசம், தொழில் , என்று இன்று இருக்கும் எந்த அடையாளமும் நிலையில்லாமல் மாறிக் கொண்டே வரும். மாற்றத்திற்கு உட்பட்டது தேக சம்பந்தமான அடையாளங்கள். நான் இன்னார், இந்த உருவம், தேசம், மொழி, போன்ற அடையாளங்களை இப்பொழுது போட்டிருக்கின்றோம். இந்த வேஷத்தினை போட்டிருப்பது ஒரு ஆன்மா. வேஷத்தை களைந்து விட்டால் வேறு ஒரு வேஷத்தினை மீண்டும் கிடைக்கும். எல்லா வேஷங்களும் நிரந்தரமாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது, மாறிக் கொண்டே இருக்கும். ஆன்மா எந்த வேஷத்தை எடுத்தாலும் அதன் தன்மையை இழப்பதில்லை.

நாம் யார்?


ஆன்மா தான் நமது உண்மையான அடையாளம். அகம் ஆன்மா. நான் உடல் அல்ல. நாம் சுயமரியாதையோடு இருந்திருந்தால் நாம் மரியாதை என்பதை இழக்க வேண்டிய அவசியமில்லை. நீ சுயமரியாதையோடு இருந்தால் மற்றவர்களை விட ஒரு படி மேல் உயர்ந்து நிற்கலாம். "நாம் ஆன்மா" அதற்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. நாம் அந்த நிலையிலிருந்து இறங்கக் கூடாது. நாம் நமது உண்மையான அடையாளங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது. நான் அழிவற்றவன். நான் ஆத்ம தேசத்தை சார்ந்தவன். நான் பரமாத்மாவின் பிள்ளை. இவைகள் தான் நமது உண்மையான அடையாளங்கள். இந்த ஞானம் ஒருவருக்கு கிடைத்தால் அவருடைய அஞ்ஞானம் என்ற இருள் விலகும்.


நமக்கு முக்கியமாக நான்கு அடையாளங்கள் இருக்கின்றன.


1. நான் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தாய் தந்தை இவர்கள். இது என்னுடைய குழந்தை. இது ஒரு அடையாளம்.
2. நான் இந்த சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த மொழி பேசுபவன், இந்த ஜாதி மதத்தை சார்ந்தவன் என்பது ஒரு அடையாளம்.
3. நான் இந்த தேசத்தைச் சேர்ந்தவன் என்பது ஒரு அடையாளம்.
4. நான் ஒரு ஆண், நான் ஒரு பெண். இது ஒரு அடையாளம்.


இது ஒரு தவறான அடையாளம். நான் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. நான் ஒரு ஆத்மா. ஆன்மாவிற்கு ஆண், பெண் அடையாளம் இல்லை.


யார் ஒருவர் இந்த நான்கு அடையாளங்களையும் கடந்து இருக்கிறாரோ அவர் தான் வாழ்கையில் வெற்றி பெற்றவர்.


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.


ஈஸ்வரன் எந்த அடையாளமும் இல்லாதவர். உருவம், சப்தத்திற்கு அப்பாற்பட்டவர். அது போல் நாமும் இருக்க வேண்டும். அப்பா மாதிரி பிள்ளை ஆக வேண்டும்.


எனவே இந்த நான்கு அடையாளங்களும் ஒரு இருட்டு. இந்த அடையாளம் என்பது உண்மையில்லை என்று யாருக்கு இது தெரிகிறதோ அவரால் தான் முக்தி அடைய முடியும். இதற்காக தான் மாசி மாதம் மஹா சிவராத்திரி என்ற விழா கொண்டாடப்படுகிறது. மனிதர்கள் அறியாமை என்னும் இருட்டிலிருந்து வெளி வர வேண்டும். அறிவு சார்ந்த இருட்டில் இருப்பது தான் அறியாமை. அறியாமை என்ற இருள் இருந்தால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. எனவே அடையாளங்களை நம்பினால் நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.


ஐம்புலன்களையும் கடந்த நிலையில் இருக்கின்ற சுகம், இதற்கு அதீந்திரிய சுகம் என்று பெயர். அந்த அதீந்திரிய சுகத்திற்கு வழிகாட்டுபவர் தான் சிவன். நீயும் இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்க பழகு என்பதை கொண்டாடுவது தான் மஹாசிவராத்திரி. இந்த ஐம்புலன் உணர்வுகளைத் தாண்டி யார் வாழ்கிறார்களோ அவர்கள் தான் மதிப்பு மிக்கவர்கள். இதன் அடையாளம் தான் குடும்பம். யார் ஒருவரால் புலன்களிலிருந்து விடுபட முடியுமோ அவர்கள் தான் பெரியவர்கள், மதிப்பு மிக்கவர்கள்,மற்றவர்கள் எல்லாம் அடிமைகள்.


நாளமில்லா சுரப்பி மண்டலம் உடலை எப்பொழுதுமே சுமூகமாக நடத்திச் செல்லும். வாழ்க்கையில் எப்பொழுதுமே சுமுகமாயிருப்பார்கள். யாருடனும் உரசிக் கொள்ள மாட்டார்கள். பொதுவாக மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமாகயிருப்பார்கள். திருப்தியாக இருப்பார்கள். பெற்றதை கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருப்தி இல்லையெனில் உடலில் உராய்வு ஏற்படும். முக்கியமாக அழுத்தம் வரக் காரணம் மனம் திருப்தியாக இல்லை. திருப்தி இல்லாததால் எல்லாம் இருந்தாலும் கூட ஒரு வெறுமையுடன் இருப்பார்கள். ஐம்புலன்களையும் அடக்க தெரிய வேண்டும். மனதை மிக சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஏமாற்றத்தையும் தாங்கிக் கொண்டு உலகம் போகிற போக்கில் சென்று விட வேண்டும். எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்பவர்களுக்கு ஆயுள் நிச்சயம் அதிகரிக்கும். மகிழ்ச்சி என்பது நிச்சயம். நம்மிடம் என்ன உள்ளதோ அதை வைத்து மகிழ்ச்சியாக வாழத் தெரிய வேண்டும். எது இருந்தாலும், இல்லையென்றாலும் திருப்தியாக வாழ வேண்டும்.


மண்டலம் : நாளமுள்ள சுரப்பி மண்டலம்
குணம் : திருப்தி
மாதம் : மாசி
செயல்பாடு : சுமூகமாக

வெண்டைக்காய் பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்





–:––












Displaying 11 Ladies finger.mp3.

Click to Download

வெண்டைக்காய் பாடல் வரிகள்

1௦௦ மருந்துகள் இந்த உலகில் இருக்கலாம்
வெண்டை ஒன்றைப்போல் வேறொன்று இருக்குமா?
வெண்டை சுவைக்க தலைவலி ஓடிப்போகும்
வெண்டை புசிக்க வாயுத்தொல்லை நீங்கும்
அடேய் நண்பா பிரஷர் வெல்வேன்
சவால் வேண்டாம் பிரஷர் வெல்வேன்

1௦௦ மருந்துகள் இந்த உலகில் இருக்கலாம்
வெண்டை ஒன்றைப்போல் வேறொன்று இருக்குமா?


ஈரப்பதம் காத்திடுமே வரட்சிதனை நீக்கிடுமே
தலைவலி வெயிலினால் என்ற நிலை வாராதே
கூர்மையாய் பார்வை மாறும்
கூர்மையாய் செவிகள் கேட்கும்
நரம்புகள் கூர்மையாய் மரத்த நிலை வாராதே
ஒவ்வொரு நரம்பும் ஈரம் பெற்றிடுமே
ஒவ்வொரு சருமமும் ஈரம் பெற்றிடுமே
நரம்பு சருமம் இரண்டும் இங்கு ஜொலித்திடுமே

அடேய் நண்பா பிரஷர் வெல்வேன்
சவால் வேண்டாம் பிரஷர் வெல்வேன்

இன்று உள்ள இருமல் தொல்லை
நேற்றிருந்த குறட்டை தொல்லை
நீங்குமே முழுமையாய் வெண்டைக்காயை உண்பதினால்
வறண்டு போன வாயும், தொண்டையும்
வறண்டு போன நக்கும், மூக்கும்
மாறுமே ஈரமாய் வெண்டைக்காயை புசிப்பதினால்
ஒவ்வொரு செல்லும் ஈரம் நிறைந்துள்ளதே
ஒவ்வொரு திசுவும் ஈரம் நிறைந்துள்ளதே
எனது தொண்டை ரோகம் அழித்து காத்திடுமே

அடேய் நண்பா பிரஷர் வெல்வேன்
சவால் வேண்டாம் பிரஷர் வெல்வேன்

1௦௦ மருந்துகள் இந்த உலகில் இருக்கலாம்
வெண்டை ஒன்றைப்போல் வேறொன்று இருக்குமா?
வெண்டை சுவைக்க தலைவலி ஓடிப்போகும்
வெண்டை புசிக்க வாயுத்தொல்லை நீங்கும்
அடேய் நண்பா பிரஷர் வெல்வேன்
சவால் வேண்டாம் பிரஷர் வெல்வேன்


உங்கள் அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவை எங்களுடன் பகிர்ந்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும் service@vegetableclinic.com
காய்கறிகள்
வெண்பூசணி
கத்தரிக்காய்
கொத்தவரங்காய்
புடலங்காய்
அரசாணிக்காய்
கோவைக்காய்
முருங்கைக்காய்
பீர்க்கன்காய்
தேங்காய்
எலுமிச்சை
வெண்டைக்காய்
வாழைக்காய்

About Us
Vegetable are rich source of soluble, insoluble and resistant fibers. Fibers play a major role in body anabolism, metabolism and catabolism. Each and every vegetable have their own unique property which serves as a life saving medicine for a specific disease or disorder. It is time to pick up which vegetable suits for us the most to achieve complete health. Vegetableclinic.com simplifies this task by fixing an appointment with the physician and communicating through online or meeting him in person Read More
Recent Posts
வெண்பூசணி
கத்தரிக்காய்
கொத்தவரங்காய்
புடலங்காய்
அரசாணிக்காய்
கோவைக்காய்
முருங்கைக்காய்
பீர்க்கன்காய்
தேங்காய்
எலுமிச்சை
வெண்டைக்காய்
வாழைக்காய்
Contact Us
+919994443517
service@vegetableclinic.com
132,Co-Operative Colony,
Uppilipalayam,
Near Trichy Road,
Rajalakshmi Mills Bus Stop,
(Opp.Street of SBI ATM, North Side of Perks School)
Coimbatore - 641 015
Consulting - 12 noon - 6 pm
Thursday Holiday


Copyright © 2015 vegetableclinic.com


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

12 vegetable காய்கறி வைத்தியம் ஹீலர் கோபிநாதன் 9443190703💐 

https://youtu.be/KFGhrp8DGFA


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Thursday, November 15, 2018

12 vegetable காய்கறி வைத்தியம் ஹீலர் கோபிநாதன் 9443190703💐 

https://youtu.be/KFGhrp8DGFA


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Wednesday, November 14, 2018

நோயில்லாமல் வாழ எதை சாப்பிடவேண்டும் | Which Food Is Healthy | Dr.Ku.Siva...how food can grow you. 

https://youtu.be/LNzxh8g3i6M


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Tuesday, November 13, 2018

Date palm fruit Cultivation பேரிட்சை பழம் சாகுபடி 

https://youtu.be/Tj_wFkmCcug


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Wednesday, November 07, 2018

Vegetableclinic.com 

http://Vegetableclinic.com
Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Tuesday, November 06, 2018

நியாபக மறதியை குணமாக்கும் வெண்பூசணிக்காய்/ காய்கறி வைத்தியமுறை 

https://youtu.be/rFFlOyW1EgQ


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Monday, November 05, 2018

இயற்கை உணவு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் - பாகம் 3  

https://youtu.be/j4ewGjq4FVI


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Sunday, November 04, 2018

இயற்கை உணவு சமைக்காமல் ருசியாக செய்வது எப்படி? Chennai November 22-25||C... 

https://youtu.be/3q2VUM3AVJU


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Friday, November 02, 2018

புடலங்காய்!  

புடலங்காய்

புடலங்காய் பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்





5:58












Displaying 04 Snake gourd.mp3.

Click to Download


உங்கள் அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவை எங்களுடன் பகிர்ந்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும் service@vegetableclinic.com
வாயு மண்டலம் என்றால் என்ன?


வாயு மண்டலம் என்பது சூட்சமம். இந்த வாயு மண்டலத்தினை புரிந்து கொள்வது மிக மிக கடினம். சூட்சமத்தை பார்க்க முடியாது. புரிந்து கொள்ள மட்டுமே முடியும். நம் உடலில் வாயுமண்டலம் என்ற அமைப்பு உள்ளது. நாம் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? அதாவது தூக்க நேரத்தில் தூங்க வேண்டும். சாப்பிடும் நேரத்தில் சாப்பிட வேண்டும். வேலை நேரத்தில் வேலை செய்ய வேண்டும். இதை ஒருங்கிணைத்து உலகத்தில் உள்ள இயக்கங்களோடு தன்னை பொருத்திக் கொண்டு வாழ வேண்டும். இதை நாம் உயிரியல் கடிகாரம் என்று அழைக்கின்றோம்.


பறவைகள், விலங்குகள் அனைத்தும் இயற்கையோடு ஒட்டி, இணைந்து வாழ்கின்றன. மனிதன் இயற்கையை மீறி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். நாம் உலகத்தோடு ஒட்டி வாழ்தல் வேண்டும்.


உடலுக்குள் இயங்குவது ஒரே பிராண வாயுவாக இருந்தாலும் அவ்வாயு செய்யும் வேலைகளை வைத்து அதனை பத்து வித பெயர்களில் அழைக்கப்படுகிறது.


1 பிராணன்
2 உதானன்
3 சமானன்
4 அபானன்
5 வியானன்
6 கூர்மன்
7 நாகன்
8 கிரிகரன்
9 தேவ தத்தன்
10 தனஞ்செயன்


இந்த வாயுக்கள் உடலில் பல்வேறு இடங்களில் இருந்து உடலை இயங்கச் செய்கின்றன. கண் அசைவிற்கு கூட இந்த வாயுமண்டலம் தான் காரணம். இந்த வாயுக்கள் இரத்த ஓட்டத்தினையும், நிணநீர் ஓட்டத்தினையும், சுவாச செயற்பாட்டினையும் , உயிர் இயக்கத்தினையும் நடத்துகின்றன.


இந்த வாயு மண்டலம் முழுமையாக மனதோடு தொடர்புடையது. இந்த வாயு மண்டலம் ஒவ்வொரு செல்லிற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. நாம் இதை "மனோவியல் நிபுணர்" என்றும் அழைக்கலாம். மனம் பாதிக்கப்பட்டு ஒரு விஷயத்தினை மறக்க முடியாமல் மனதிலே தேக்கி வைத்திருந்தால் அது நமது உடலையும், எண்ணத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். மனநிலையில் மிகப் பெரிய தடுமாற்றம் ஏற்படும்.


நம் உடம்பில் வாய்வுகள் சுற்றி இயக்கம் பெற்றுள்ளன. இந்த வாய்வுகள் தான் உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக விளங்குகின்றன. இந்த வாயுக்களைப்பற்றி மேற்கத்தைய மருத்துவம் ஒரு துளியும் அறிந்திட வாய்பில்லை. இது வாதம் சார்ந்த விஷயம். இது ஒரு செயல், ஒரு பொருள் அல்ல. எனவே இதை புரிந்து கொள்வது கடினம். இதை கண்ணால் காண இயலாது. இது ஒரு சக்தி ஓட்டம். இந்த சக்தியை புரிந்து கொள்ளக்கூடிய அறிவியல் இல்லை.


பத்து பேர் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதில் சில பேருக்கு மருத்துவப் பரிசோதனையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று வரும். எல்லா பரிசோதனைகளையும் எடுத்து விட்டோம். நீங்களாகவே உங்களுக்கு பிரச்சினை உள்ளது என்று நினைத்துக் கொள்கிறீர்கள் என்று கூறி விடுவார்கள். ஒருவர் ஒரு பிரச்சினையும் இல்லாமல் ஏதாவது பிரச்சினை என்று கூற முடியுமா? முடிவாக ஏதேனும் மனநல வைத்தியரை பார்க்க சொல்லி அறிவுறுத்துவார்கள். வாயு மண்டலம் வித்தியாசமானது.


அடிப்படையில் வாதம்,பித்தம், கபம் என்று மூன்று நிலைகள் உள்ளன.


வாதம் .. என்பது வாயு சர்ந்த விஷயம்.
பித்தம் .. என்பது இரசாயன மாற்றம்
கபம் .. என்பது பருப்பொருள்

வாதம்

வாதம் என்பது ஒரு பிரிவு. மருத்துவமனையில் இரத்தம், ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை எடுத்து பார்க்கின்றார்கள். வாதம் என்பதை பார்க்க எந்த ஒரு கருவியும் மருத்துவ உலகில் இல்லை. இப்பொழுது இருக்கும் மருத்துவ உலகம் மூன்றில் இரண்டு நபருக்கு மட்டுமே தீர்வு கொடுக்க முயலுகின்றது. மீதி ஒரு பகுதி மக்களுக்கு என்ன காரணம் என்று பதில் சொல்லத் தெரியாது. எனவே இது ஒரு ஊனமுற்ற வைத்திய முறை. இதில் முழுமையான தீர்வு கிடைக்கும் என்றால் கண்டிப்பாக முழுமையான தீர்வு கிடைக்க முடியாது. இறுதியாக ஒரு மனநல மருத்துவரை பார்க்க சொல்லி பரிந்துரைப்பார்கள். வாதம் சார்ந்த இந்த கருத்துக்கள் இந்த மருத்துவ உலகிற்கு என்னவென்றே தெரியாது.


வாத நாடி என்பதை பற்றி ஏதும் தெரியாது. வாதம் என்பது ஒரு சூட்சுமம். இது பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக இல்லை. சூட்சமம் என்பது புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விஷயம். இந்த சூட்சமம் தெரிவது தான் மிகப் பெரிய இரகசியம்.


வாயுமண்டலம் எதனால் பாதிப்படைகின்றது?


இந்த சூட்சமத்தை அறிந்தால் மிகப் பெரிய வெற்றி. வாயுமண்டலம் சீராக இயங்கும்பொழுது, உடல் நல்ல நிலையில் இயங்கும். வாயுமண்டலத்தை சமாதானப் படுத்தி சீரான நிலையில் சுகமாக வைத்துக் கொள்வது தான் தூக்கம். தூக்கம் கெட்டுப் போனால் ஒட்டு மொத்த வாயுமண்டலம் கெட்டுப் போகும். தண்ணீர், உணவு இல்லாமல் வாழ்ந்து விடலாம். தூங்காமல் வாழ முடியாது. தூக்கம் என்பது மிக மிக அத்தியாவசியமான ஒரு விஷயம். இந்த தூக்கத்தின் தரம் என்பது நாம் எப்படி தூங்குகின்றோம் என்பதை பொருத்து அமைகின்றது.


ஒரு சர்க்கரை நோயாளி அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவரால் நன்றாக உறங்க முடியாது. ஒரு சிலர் சிறு சப்தம் கேட்டால் கூட விழித்துக் கொள்வார்கள். ஒரு சிலர் வெடி சப்தம் கேட்டால் கூட எழுந்திருக்க மாட்டார்கள். இப்பொழுது பெரும்பாலும் தூக்கத்தின் தரம் குறைந்து விட்டது. அது போல் நாம் தூங்கும் போது நாம் பார்த்த, கேட்ட அனைத்தும் தூங்கும்போது பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் தூக்கத்தின் மேன்மையான தன்மை குறைந்து விடுகிறது. எப்படி நாம் உணவு உண்ணும்பொழுது கையை கழுவுகின்றோமோ அதுபோல் தூங்கும்போது மனதினை கழுவிவிட்டு உறங்க செல்ல வேண்டும்.


எவ்வளவு கடினமாக உழைத்தாலும் ஒரு மணி நேரம் தூங்கினாலே உங்கள் உடல் புத்துணர்ச்சி பெறும். ஆனால் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் இருந்தால் கால தாமதமாகி தான் புத்துணர்ச்சி பெறும். தேவையில்லாத விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வது தான் இதற்கு முக்கிய காரணம்.


எதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், எதை மறக்க வேண்டும் என்ற ஒரு நியதி உண்டு. மறக்க வேண்டிய விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள கூடாது. ஞாபகத்தில் வைத்துக் கொள்வதை மறந்து விடக் கூடாது. இந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் வாயுமண்டலம் சீர்கெடும். தேவையில்லாத விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருந்தால் பிரச்சினைகள் ஏற்படும்.


புடலங்காயின் நன்மைகள்


வாயுமண்டலத்தின் பாதிப்பால், தூக்கமின்மையால் தலைவலி ஏற்படும். அவர்கள் சரியாக தூங்க மாட்டார்கள். இல்லையெனில் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். தூங்கிக் கொண்டே இருந்தாலும் பிரச்சினை. ஒருவர் ஆரம்பிக்கவே இல்லை. ஒருவர் முடிக்கவே இல்லை. அதாவது தூக்கத்தினால் ஏற்பட்ட தலைவலி அதாவது மனம் சமாதானம் அடையவில்லை. ஏதோ சங்கடம் உள்ளுக்குள்ளே சுற்றிக் கொண்டிருக்கின்றது.


பூகம்பம் என்பது பூமியிலிருந்து வாயு பிளந்து வெளியேறுவது. வாயுவால் எதையும் அசைக்க முடியும், உடைக்க முடியும். வாயு அதனதன் வழியில் ஒழுங்காக செல்ல வேண்டும். வழி மாறினால் பிரச்சினைகள் ஏற்படும். வாயு மண்டலம் பாதிப்படையும் போது நமது கண்களின் மேலுள்ள தசை தோல் வழியாக வெடித்து வெளியேறும். எனவே வாயு மண்டலத்தின் பாதிப்பால் கண்களில் புரை ஏற்பட வாய்ப்புண்டு.


அதே வாயு மண்டலம் வேறு திசை வழியாக மாறி காது வழியாக சென்றால் காது இரைச்சல், சப்தமாக கேட்கும்.


வாயு மண்டலத்தின் பாதிப்பால் உள்நாக்கு நீண்டு வளரும். அதனால் அவர்கள் தொடர்ந்து இறுமிக்கொண்டே இருப்பார்கள். நாக்கில் வெடிப்புகள் ஏற்படும்.


வாயு மண்டல பாதிப்பால் அவர்களால் படுத்து உறங்க முடியாது. இருமல் வரும். உடனே எழுந்து விடுவார்கள். படுப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும்.


வாயுமண்டலம் சரியாக இயங்கவில்லை எனில் உண்ட உணவு அப்படியே வாந்தியாக வெளிவரும். அல்லது பேதியாகும்.


இந்த வாயு ஆசனவாய் வழியாக வரும் பொழுது ஆசன வாயில் வெடிப்பு ஏற்படும்.


சிறுநீர் கழிக்கும் போது காரமான நெடி உண்டாகும்.


வாயுமண்டல பாதிப்பால் தோலில் வெடிப்புகள் ஏற்படும். கை கால்களில் வெடிப்பு ஏற்படும்.

இவையனைத்தும் வாயுமண்டலம் சீர் கெட்டுப் போனதின் விளைவுகள்.


குணம் : தியாகம்


வாயு மண்டலத்தின் குணம் தியாகம். தியாகம் என்பது நம்முடைய பொருளையோ, உறவையோ, பதவியையோ, கருத்தையோ அல்லது சௌகரியத்தையோ ஒரு உன்னத நோக்கத்திற்காக அல்லது பிற உயிர் நலனுக்காக அதைப்பற்றி ஒன்றுமே அறியாமல் நினைவிலிருந்து நீக்கும் பண்பாகும். இது ஒரு அசாதாரண குணம். எதை வேண்டுமோ அதை பிடித்துக்கொள்ள வேண்டும். எதை விட வேண்டுமோ அதை விட்டுவிட வேண்டும்.


ஒரு நோயாளி எதற்கும் கட்டுப்பட மாட்டார். முழுக்க முழுக்க மனநிலையால் பாதிக்கப்பட்டிருப்பார். ஒரு விஷயத்தை அவர்களால் மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது. தியாகம் என்பது நடந்த எந்த ஒரு விஷயத்தையும் உள் வாங்காமல் இருப்பது. கடந்த காலத்தை முற்றலுமாக நீக்கிவிட்டு அப்படியே நிகழ் காலத்திற்கு மாறுவது தான் தியாகம். என்ன நடந்தது என்றே தெரியக்கூடாது. இந்த மாதிரியான ஒரு பக்குவம் இருந்தால் வாயு மண்டலத்தில் பிரச்சினை வராது.


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.


நன்றியை இறைவனுக்கு காட்டுங்கள். நன்றியில்லாத அனைத்து விஷயங்களையும் அப்பொழுதே மறந்து விடுங்கள். இதை மாற்றி யோசித்தால் வாயுமண்டலம் கெட்டுப் போகும். நாம் அனைவருமே தற்பொழுது மன நோய் வியாதிக்காரர்களாக மாறிக்கொண்டு வருகின்றோம். ஏனெனில் அதிகமான பிரச்சினை, குழப்பங்களில் சிக்கி மன அமைதியில்லாமல் இருக்கின்றோம். இதற்கு மிக சிறந்த தீர்வு புடலங்காய்.


ஞாபகத்திறனை முறையாக செயற்படுத்துவது வாயு மண்டலம். ஒருவரை மன்னிக்கக்கூடிய ஆற்றல் வேண்டும். இதுவே தியாகத்தின் அடையாளம். வாயு மண்டலத்திற்கு உதாரணமாக கடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நண்டு குட்டிகளை ஈன்ற பிறகு அது இறந்து விடும். தன்னை அழித்துக் கொண்டு குட்டிகளை ஈனுகின்றது. எனவே தியாகத்தின் அடையாளமாக அதை கூறுகின்றோம். ஒரு மனிதனின் உயர்வு எதுவானாலும் அவருடைய தியாகத்தை தான் உயர்வாக கூற முடியும். ஏதோ ஒரு விஷயத்தை, அவருடைய சுகத்தினை இழந்து தான் தியாகம் செய்ய முடியும். தியாகத்தின் மூலம் தான் ஒருவர் உயர்ந்த நிலையினை அடைய முடியும்.


தியாகம் என்பது பலனை திருப்பி எடுக்காத நிலை. தியாகத் தன்மையில்லை எனில் தூக்கம் கெட்டுப் போகும். மனம் கெட்டுப் போனால் என்ன வியாதி வேண்டுமானாலும் வரலாம். இருக்கும் நோய்கள் அதிகமாகலாம். இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது. சிகிச்சை தோல்வியில் தான் சென்று முடியும். இவர் என்ன நினைக்கின்றார் என்று யாருக்கும் தெரியாது. எனவே மனநிலை பாதித்த ஒருவருக்கு சிறந்த நிவாரணம் அளிப்பது புடலங்காய். புடலங்காய் ஒரு சிறந்த மனநல வைத்தியர். இதன் மூலம் அவரின் மனநிலையை சீர்படுத்தி விடலாம்.


உங்களுக்கு தியாக மனப்பான்மையிருந்தால் அந்த இறைவனிடமிருந்து அஷ்ட சக்திகளும் கிடைக்கும். இந்த அஷ்ட சக்திகளை அஷ்டலட்சுமிகள் என்று அழைக்கின்றோம். ஒரு மனிதனின்

ஐம்புலன்களையும் அடக்கக்கூடிய தன்மை,
தயாராகும் சக்தி,
வளைந்து கொடுக்கும் தன்மை,
சகிப்புத் தன்மை,
பகுத்தறிவு,
தீர்மானித்தல்,
எதிர்கொள்ளுதல்,
ஒத்துழைப்பு

போன்ற எட்டு குணங்களும் நமக்கு கிடைக்கும். இதை நாம் வரலட்சுமி விழாவாக கொண்டாடுகின்றோம். இந்த பூமியில் வாழும் அனைத்து மனித சமுதாயத்திற்குமே வரமாக கிடைக்கக்கூடிய ஒரு விழா. இதற்கு தியாக குணம் வேண்டும். ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும். ஒருவர் எந்தளவிற்கு தியாகம் செய்கிறார்களோ அந்தளவிற்கு வரத்தினை பெற தகுதியானவர்கள்.


நம் வாழ்க்கை நம் கையில். நாம் நம்மை யாரோடும் ஒப்பிட்டு பார்க்க கூடாது. ஏமாற்றம் ஏற்பட இதுவே முக்கிய காரணம். இருக்கின்றதை விட்டு பறக்க ஆசைப்படக் கூடாது. நிகழ்காலத்தில் வாழாத தன்மை, மனம் வேறு எங்கோ ஏக்கத்தில் இருப்பது இது போன்ற நிலையில் இருக்கும் போது, நிறைவேறாத ஆசைகளையுடைய ஆன்மா நம்மை வந்தடையும். அதாவது வாகனம் ஒன்று. ஓட்டுபவர் இரண்டு பேர். இது எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாது.


எனவே வாயு மண்டலப்பிரச்சினை என்பது சம்பந்தப்பட்டவரே காரணமாக இருக்கலாம். அல்லது ஆன்மா சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் இருக்கலாம்.


உடம்பில் வாயு மண்டலத்தின் செயற்பாடு வேகமாகயிருக்கும். உடம்பின் இயக்கம் அதிகமாக இருக்கும். மனம் தட்டு தடுமாறி போக வாய்ப்புண்டு. ஆடி மாதம் சக்தி அதிகம். பலன் அதிகமாக கிடைக்கும். நல்லது, கெட்டது எது செய்தாலும் பலன் பல மடங்கு பெருகி வரும்.


மனிதன் ஏக்கம் கொள்ளக்கூடாது. மனம் அழுத்தம் கொள்ளக்கூடாது. மனிதன் அடுத்தவர்களை ஒப்பிட்டுப் பார்க்க கூடாது. இதனால் நிம்மதி கெட்டு போகும். பழி வாங்கும் உணர்வு ஏற்படும். மன்னிக்கும் ஆற்றல் கண்டிப்பாக வேண்டும். சகிப்புத் தன்மை வேண்டும்.


மண்டலம் : வாயு மண்டலம்
குணம் : தியாகம்
மாதம் : ஆடி
உடலின் செயல்பாடு : சக்தி.

புடலங்காய் பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்





–:––












Displaying 04 Snake gourd.mp3.

Click to Download

புடலங்காய் பாடல் வரிகள்



புடலங்காய் புடலங்காய், நீளமான புடலங்காய்
தூங்கிடத்தான் புடலை வேண்டும் 2
இந்த பூலோகத்தில் யாரும் தூங்கும் முன்னே
உன்னை சமைக்காமல் கடித்து தின்பேன்
புடலங்காய் புடலங்காய், நீளமான புடலங்காய்
தூங்கிடத்தான் புடலை வேண்டும்
இந்த பூலோகத்தில் யாரும் தூங்கும் முன்னே
உன்னை சமைக்காமல் கடித்து தின்பேன்

இது உணவல்ல இது மருந்தல்ல
இது ரெண்டோடும் சேராத மதி நுட்பம் 2

தலை சாயாதே விழி மூடாதே
சில சப்தங்கள் தூக்கத்தை கெடுத்துவிடும்
காயே காயே பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்பே
தூங்காமல் முடியாமல் புரண்டு புரண்டு படுத்தேன்

நாம் இரவின் மடியில் பிள்ளைகள் தூங்க நீ வேண்டும் நீ வேண்டும்

புடலங்காய் புடலங்காய், நீளமான புடலங்காய்
தூங்கிடத்தான் புடலை வேண்டும்
இந்த பூலோகத்தில் யாரும் தூங்கும் முன்னே
உன்னை சமைக்காமல் கடித்து தின்பேன்

நிக்காத சப்தத்தை காதில் ஒளிப்பது யாரு?
ஆசனவாய் கை கால் நாக்கில் வெடிக்க வைப்பது யாரு?
இதை எண்ணி எண்ணி கடுப்பாகி போகிறேன்

புடலங்காய் புடலங்காய், நீளமான புடலங்காய்
தூங்கிடத்தான் புடலை வேண்டும் 2

காயே காயே எலும்பெல்லாம் குறை நீக்கி சரியாய் வளர வேண்டும்
கடுப்பின்றி நெடியின்றி சிறுநீர் கழிக்க வேண்டும்
அட மதியில் மனதில் மாற்றம் வேண்டும்
உன் போன்ற காய் வேண்டும்.

புடலங்காய் புடலங்காய், நீளமான புடலங்காய்
தூங்கிடத்தான் புடலை வேண்டும்
இந்த பூலோகத்தில் யாரும் தூங்கும் முன்னே
உன்னை சமைக்காமல் கடித்து தின்பேன்


உங்கள் அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவை எங்களுடன் பகிர்ந்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும் service@vegetableclinic.com
காய்கறிகள்
வெண்பூசணி
கத்தரிக்காய்
கொத்தவரங்காய்
புடலங்காய்
அரசாணிக்காய்
கோவைக்காய்
முருங்கைக்காய்
பீர்க்கன்காய்
தேங்காய்
எலுமிச்சை
வெண்டைக்காய்
வாழைக்காய்

About Us
Vegetable are rich source of soluble, insoluble and resistant fibers. Fibers play a major role in body anabolism, metabolism and catabolism. Each and every vegetable have their own unique property which serves as a life saving medicine for a specific disease or disorder. It is time to pick up which vegetable suits for us the most to achieve complete health. Vegetableclinic.com simplifies this task by fixing an appointment with the physician and communicating through online or meeting him in person Read More
Recent Posts
வெண்பூசணி
கத்தரிக்காய்
கொத்தவரங்காய்
புடலங்காய்
அரசாணிக்காய்
கோவைக்காய்
முருங்கைக்காய்
பீர்க்கன்காய்
தேங்காய்
எலுமிச்சை
வெண்டைக்காய்
வாழைக்காய்
Contact Us
+919994443517
service@vegetableclinic.com
132,Co-Operative Colony,
Uppilipalayam,
Near Trichy Road,
Rajalakshmi Mills Bus Stop,
(Opp.Street of SBI ATM, North Side of Perks School)
Coimbatore - 641 015
Consulting - 12 noon - 6 pm
Thursday Holiday


Copyright © 2015 vegetableclinic.com


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

Thursday, November 01, 2018

காய்கறி வைத்தியம் ( Vegetable clinic ) 

https://youtu.be/_6xig1dQCmo


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

காய்கறி வைத்தியம் ( Vegetable clinic ) 

https://youtu.be/_6xig1dQCmo


Sent from my iPad. Subramanian Ananth
Ashokan.blogspot.com
Ashokan
E- mail. Ashok41@gmail.com

This page is powered by Blogger. Isn't yours?